செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பகல் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும், 9 மணிக்கு வாணவேடிக்கையும், 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் கிராம மக்கள் செய் திருந்தனர்.