நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி 108 சங்கு அபிஷேகம் நடந்தது. விழாவைö யாட்டி 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவசக்தி யாகம் நடத்தப்பட்டது. சுவாமிகளுக்கு பூஜை செய்யப்பட்ட சங்குகளில் இருந்த புனித நீரால் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை குமார், ஹரி, சிவா குருக்கள் செய்தனர்.