பதிவு செய்த நாள்
27
ஆக
2014
11:08
ஆர்.கே.பேட்டை : வங்கனுார், செவிண்டியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக, திரளான பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்தனர். வங்கனுார், செவிண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. இதையடுத்து, தினசரி அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவடைந்தது. நிறைவுநாள் அபிஷேகத்தை ஒட்டி, திரளான பக்தர்கள், பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.காலை 9:00 மணிக்கு துவங்கிய பால்குடம் ஊர்வலம், மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக சென்று, 11:00 மணியளவில், கோவிலை அடைந்தது. இதில், பால்குடத்தில், அம்மன் உருவச்சிலையை வடிவமைத்திருந்தனர். மாலை 6:00 மணிக்கு, உற்சவர் அம்மனுக்கு, கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 8:00 மணிக்கு, செவிண்டியம்மன் வீதியுலா எழுந்தருளினார்.