புதுச்சேரி: சோலை நகர் விநாயகர் கோவிலில், புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. முத்தியால்பேட்டை சோலை நகர், சோலை விநாயகர், ராஜராஜேஸ்வரி கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கோ பூஜையும், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் தேங்காய் அலங்காரமும், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், தீ சாகச நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.