வாலாஜாபாத்: முத்துமாரியம்மன் கோவிலில், 7ம் ஆண்டு ஆவணி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம், 7ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, காலை 10:00 மணி அளவில், கிராம தேவதை பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டனர். பகல் 2:00 மணி அளவில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு மேள தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டு முழங்க, முத்துமாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பத்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, அப்பகுதி கிராமவாசிகள் செய்திருந்தனர்.