விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள கோட்டை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 29ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு ஹோமம், 9:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை, 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.