பதிவு செய்த நாள்
13
செப்
2014
11:09
விருதுநகர்: திருச்சுழி வட்டம், ஆவரங்குளத்தில் வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தரும் மாட்டுத் தலையை மான் தலையாக்கிய பொய் சொல்ல மெய் சொல்லும் அய்யனார் சுவாமி கோயில் உள்ளது. இங்கு பூர்ணகல புஷ்கலா சமேதமாக அய்யனார் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி புதன் கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைத் தொடங்கியது. விழாவில் நேற்று (செப்.12ல்) காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்கு அய்யனார் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களான ஸ்ரீவிநாயகர் சுவாமி, ஸ்ரீமுருகன் சுவாமி, ஸ்ரீ சிவன் சுவாமி, ஸ்ரீ நந்தீஷ்வரர் சுவாமி, ஸ்ரீ மலையாள கருப்பு சுவாமி, ஸ்ரீ சந்தனகரு ப்பு சுவாமி, ஸ்ரீபேச்சியம்மன் சுவாமி, ஸ்ரீமுத்துகருப்பணசுவாமி, ஸ்ரீசமயன் சந்தனகருப்பு சுவாமி, ஸ்ரீபேச்சியம்மன் சுவாமி, ஸ்ரீமுத்துகருப்பண சுவாமி, ஸ்ரீசமயன் சுவாமி, ஸ்ரீதுவாரபாலகர், ஸ்ரீபலிபீடம் இவர்களோடு கூடிய 21 சுவாமிகளும் பூவாகனத்துக்கும் குதிரை வாகனத்துக்கும், நூதன கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆவரங்குளம் கிராம பொதுமக்களும் மணக்குளம் கிராமம், வெற்றிலை முருகன்பட்டி கிராமம், களத்தூர் கிராமம், இடையபட்டி கிராமம், உடைகாஞ்சிரங்குளம் கிராமம், பறையங்குளம் கிராமம், நாசர்புளியங்குளம் கிராமம், செங்குளம் கிராமம், திம்மாபுரம் கிராமம், தரைக்குடி கிராமம், அயன்கரிசல்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.