திருக்கோவிலூர் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2014 12:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் வீதியில் உள்ள வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை, வேள்வி பூஜை, மகா பூர்னாகுதி நடந்தது. காலை 9: 00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு சுந்தரமூர்த்தி சிவாச்சாரியர் வேதமந்திரங்கள் முழங்க மூலஸ்தான மூலகலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு மூலவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில், சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.