பதிவு செய்த நாள்
13
செப்
2014
12:09
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் ராம ஆஞ்சநேயர் கோவிலில், ராம நாம வங்கி துவக்க விழா நடந்தது. விழாவையொட்டி காலை ராமர், லஷ்மணர், சீதை, ஆஞ்ச நேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் 2 கோடி ராமநாமா எழுதிய நோட்டுக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமநாம வங்கியில் நோட்டுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் அறங்காவலர் வெங்கடேச பாகவதர், நடராஜய்யர், அன்பழகன், பழமலை, துரை அரசன், கவிதா, வெங்கட்நாராயணன், அருணாசலம், சீதாலட்சுமி உள்பட பக்தர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.