பதிவு செய்த நாள்
13
செப்
2014
12:09
புதுச்சேரி: குருவப்பநாயக்கன் பாளையத்திலுள்ள செல்ல முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வில்லியனுார் அருகே உள்ள குருவப்பநாயக்கன் பாளையம், செல்ல முத்துமாரியம்மன் கோவிலின், ஐயனார் பொற்கலை பூரணி கோவில், வீரன் கோவில், இரண்டு நிலைக்குதிரைகள், ஐயனார் கோவில் விமானம், நுழைவாயில் முன்மண்டபத்திற்கு கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், நமச்சிவாயம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,நடராஜன், சேர்மன் ரகு, இந்து அறநிலையத் துறை ஆணையர் மோகன்தாஸ், பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.