பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 118-வது பிறந்த நாள் விழாவையொட்டி இன்றும் நாளையும், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் செம்பையில் உள்ள கலையரங்கத்தில் சங்கீத உற்சவம் நடக்கிறது. இன்று (13ம் தேதி) காலை 11.30 மணிக்கு விழாவை, கோவை ஆயுர்வேத பார்மசி இயக்குனர் கிருஷ்ணகுமார் துவக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான் திருச்சூர் மோகனன் தலைமை வகிக்கிறார். தொகுதி எம்.எல்.ஏ., பாலன், மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சோமசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன் இசைக்கச்சேரி நடக்கிறது. நாளை 14ம் தேதி காலை 11.45 மணிக்கு நடக்கும் செம்பை வித்யா பீடத்தின் 29-வது ஆண்டு மாநாட்டை, கலெக்டர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார். தாமோதரன் நம்பூதிரிபாடு செம்பை நினைவுரையாற்றுகிறார். மாவட்ட நீதிபதி இந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மண்ணூர் ராஜகுமாரனுண்ணியின் இசைக்கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை தலைவர் செம்பை ஸ்ரீனிவாசன், துணைத்தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்தூர் முருகன் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.