கூடி வணங்கிட கோயிலோ, சிந்தனையைக்கூட்டுவிக்க சிலைகளோ, விரிவாக வழிபட வசதியோ இல்லாமலிருக்கலாம். ஆனால் மந்திரங்களை கூறிட தடை ஏதுமில்லை. கோயிலும், சிலையும், வசதியும் கால வசத்தினால் அழிய வாய்ப்பு உள்ளது. ஆனால் மந்திர ஒலிகள் அழிவதில்லை. மந்திரத்தை தெளிவாக உச்சரிக்க முடியாத பட்சத்தில், மந்திரம் கூறும் இடங்களுக்குச் சென்று அதை பக்தியோடு காதில் வாங்கினாலே போதும். மந்திரம் சொன்னதற்கு இணையான பலன் கிடைக்கும்.