சிவனை வழிபட்டு அவரது அருளைப்பெற எட்டு வகையான விரதங்களை மேற்கொள்ளலாம். 1. சோமவார விரதம் அனைத்து திங்கட்கிழமைகளிலும் இருக்கலாம். 2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை மாத பவுர்ணமியில் மட்டும் இருக்க வேண்டிய விரதம். 3. திருவாதிரை விரதம் மார்கழி மாத திருவாதிரையில் அனுஷ்டிக்கவேண்டியது. 4. மகாசிவராத்திரி விரதம் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி தினத்தில் இருக்கும் விரதம். 5. கல்யாணவிரதம் சுவாமி, அம்பாளை திருமணம் செய்து கொண்ட நாளான பங்குனி உத்திரத்தின் போது கடைப்பிடிக்கும் விரதம். 6. பாசுபத விரதம் தைப்பூச தினத்தில் இருக்கும் விரதம். 7.அஷ்டமி விரதம் வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில் பிடிக்கும் விரதம். 8. கேதார மாவிரதம் தீபாவளி தினத்தில் கடைப்பிடிக்கும் விரதம்.