நடராஜர் ஆடும் நடனம், ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் வழங்கப்பட்டு அவை மனிதனுக்கு இருபெரும் தத்துவங்களை உணர்த்துகிறது. ஊன நடனம், மனிதர்கள் தாம் உலக வாழ்வில் கொண்டுள்ள பாசங்களில் இருந்து விடுவித்து பேரின்பம் அடையச்செய்கிறது. இது, இறைவன் செய்யும் கீழ்கண்ட ஐந்து பெருந்தொழில்களை உணர்த்துகிறது.
1. சிவன் தனது கையில் ஏந்தியுள்ள உடுக்கையை அடிக்கும்போது, உலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. இதன்மூலம் இறைவனின் படைத்தல் தொழில் உணர்த்தப்படுகிறது. 2. அபயக்கரம் ஸ்திதி எனும் காக்கும் தொழிலைக் குறிக்கிறது. 3. நெருப்பை ஏந்திய கரம், அழிக்கும் தொழிலைக் குறிக்கிறது. 4. முயலகனை மிதித்தபடி உள்ள திருவடி பக்தர்களின் பாவங்களை குறைக்கும் மறைத்தல் தொழிலைக் குறிக்கிறது. 5. மேலே துõக்கிய திருவடி பிறப்பற்ற நிலை தரும் அருளல் தொழிலைக் குறிக்கிறது. ஞானநடனம், ஏற்கனவே பேரின்பத்தில் மூழ்கியிருப்பவர்களை மேலும், மேலும் பேரின்பத்தில் மூழ்கவைத்து ஆனந்தம் அடையச்செய்கிறது. 1. சிவனின் உடுக்கையை ஏந்திய திருக்கரம், தனது உபதேச ஒலியால் மாயையை விடுவிக்கிறது. 2. நெருப்பை ஏந்திய திருக்கரம், மனிதனின் மனதில் குடிகொண்ட கர்மத்தை சுட்டெரிக்கிறது. 3. முயலகனை மிதித்தபடி ஊன்றியுள்ள திருவடி, ஆணவத்தை அடியோடு வேரறுக்கிறது. 4. துõக்கிய திருவடி மனிதர்களுக்கு ஒப்பிலாத அருளை வழங்குகிறது. 5. வீசிய திருக்கரம், தம்மால் பக்குவம் அடைந்த உயிர்களுக்கு உறைவிடமாக விளங்குகிறது. 6. அபய திருக்கரம் அளவிலாத இன்பத்தை கொடுக்கிறது