இறைவனின் அருட்சக்தியாக திகழும் தேவிக்கு பிடாரிதேவி என்றொரு பெயரும் உள்ளது. இது, தவறாக மருவிய பெயர் ஆகும். இச்சொல், பீடாபஹாரி எனும் சமஸ்கிருத சொல்லில் இருந்து பேச்சுவழக்கில் உருமாறி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு, பீடைகளை நீக்குபவள் என்று பொருள். கிராமங்களில் இவளை முப்பிடாரி அல்லது முப்பிடாதி என்ற பெயரால் காவல் தெய்வமாக வணங்குகின்றனர். பெரும்பாலும் இவள் வடக்கு நோக்கியே இருப்பாள்.