பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
திருவள்ளூர் : காஞ்சிப்பாடி, முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் அடுத்த, காஞ்சிப்பாடி கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக மூலஸ்தான விமானம் கட்டப்பட்டு, சிலைகள் புதுப்பிக்கப்பட்டன. பணிகள் முடிவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 10ம் தேதி கணபதி ஹோமத்துடன், துவங்கியது.கடந்த 12ம் தேதி, காலை, 9:30 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்த பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது.அன்றிரவு, அம்மன் தீருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.