பழநி:விடுமுறை மற்றும் கார்த்திகையை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ’வின்ச்’ ஸ்டேஷனில் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். கார்த்திகையை முன்னிட்டு பழநிக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பராமரிப்பு பணிக்காக ’ரோப்கார்’ நிறுத்தப்பட்டுள்ளதால், வின்ச்-ஸ்டேஷனில் 3 மணி நேரம் காத்திருந்து, மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசன வழியில் 2 மணி நேரம் நின்றிருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.