Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! படவேட்டம்மன், சுந்தரம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்! படவேட்டம்மன், சுந்தரம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் திருப்பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2014
10:09

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் கிழக்கு கோபுர வாயில் அடைக்கப்பட்டு பக்தர்கள் மாற்று கோபுரம்  வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூலோக கைலாசம், சிதாகாசம், இதயக்கோவில் என பல்வேறு சிறப்புகள் பெற்ற பிரசித்திப்பெற்ற சி தம்பரம் நடராஜர் கோவில் கடந்த 1987ம் ஆண்டு அனைத்து சன்னதிகள், நான்கு கோபுரம் ஆகியவை ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.  அதன் பின்னர் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரம் 2006ம் ஆண்டும், வடக்கு கோபுரம் 2007ம் ஆண்டும், தெற்கு கோபுரம் 2008ம் ஆண்டும் நடந்தது.

Default Image

Next News

சிதம்பரம் சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் நடராஜர் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பா பிஷேகம் 1.5.2015ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதனால் கடந்த இரு மாதங்களுக்கு முன் நடராஜர் சன்னதியில் மகா கும்பாபிஷேக திருப் பணிகள் துவங்குவதற்கு சுவாமி பாலாலயம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் திருப்பணிகள் கடந்த 12ம் தேதி துவங்கப் பட்டுள்ளது. திருப்பணிகள் கிழக்கு கோபுரத்தில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. அதனால் கோபுரம் சுற்றி சாரம் கட்டும் பணி துவங்கியது.  அதனால்  கிழக்கு கோபுரம் நுழைவாயில் கட்டைகளால் தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியாக  உள்ளே செல்லமுடியாது. திருப்பணிகள் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் மற்றும் சுவாமி சன்னதிகள் பொது தீட்சிதர்கள் சார்பில்  பக்தர்கள் நன்கொடை மூலம் செய்யப்பட உள்ளது. தெற்கு கோபுரம் முத்தையா செட்டியார் குரூப் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar