பதிவு செய்த நாள்
16
செப்
2014
11:09
உத்திரமேரூர்: காட்டாங்குளம் கிராமத்தில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவிலை புதுப்பித்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வழிபாட்டு தலமாக இருந்து வந்த இக்கோவில், கடந்த சில ஆண்டுகளாக, பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.
கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கோவில் தளத்தின் மேற் பகுதியில் மரக்கன்றுகள் வளர்ந்தும் காணப் படுகின்றன. மேலும், இக்கோவிலின் 16 கால் மண்டபம் மற்றும் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந் துள்ளன. கோவில் நுழைவாயில் கட்டட கல் துாண்களும் இடிந்து விழுந்து, அப்பகுதியை சுற்றி முட்புதர் நிறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல, வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள, பழமை வாய்ந்த இக்கோவிலை, பாதுகாக்க அற நிலையத் துறை அதிகாரிகள் பராமரிப்பு பணி மேற்கொண்டு, கோவிலை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் ÷ காரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய கோயில்கள் :