பதிவு செய்த நாள்
16
செப்
2014
11:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நவராத்திரிக்காக, கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி அமோகமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம், 2ம் தேதி ஆயுத பூஜை, மறுநாள், சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன், நவராத்திரி விழாவிற்காக வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து, தினமும் பூஜை செய்வர். இதற்காக, பல வகையான பொம்மைகள் தயாரிக்கும் பணி, காஞ்சிபுரத்தில் அஸ்தகிரி தெரு, டோல்கேட் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், காஞ்சி கருடசேவை, சீமந்தம், 60வது கல்யாணம், மாப்பிள்ளை அழைப்பு, பள்ளிகொண்ட பெருமாள், வெண்ணெய் கிருஷ்ணர், மதுரா கிருஷ்ணன், அன்னபூரணி, தட்சிணாமூர்த்தி, ராமர், உரியடி போன்ற விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம், பாண்டுரங்கன், ஜலநாராயண பெருமாள் போன்ற பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. ஒரு ஜோடி பொம்மைகள், 750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய் யப்படுகிறது. சுவாமி பெருமாள், அம்பாள் பொம்மை, 350 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. 500க்கும் மேற்பட்ட, பல வகை யான பொம்மைகள் தயார் செய்யப்படுகிறது.