மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.27.14 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2014 12:09
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக 27 லட்சத்து 14 ஆயிரத்து 423 ரூபாய் செலுத்திருந்தனர். ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில், கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் கோவையின் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர். அவர்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் காணிக்கையாக பணம், வெள்ளி, தங்கம் போன்ற பொருட்களை உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த கோவிலில் மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மொத்தம் 16 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஆறு தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கபட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் நிரந்தர உண்டியலில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 988 ரூபாயும், தங்கம் 79 கிராமும், வெள்ளி 351 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. தட்டு காணிக்கை உண்டியலில் திறக்கப்பட்டு எண்ணியதில் 7 லட்சத்து 26 ஆயிரத்து 435 ரூபாய் காணிக்கையாக இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் ஜீவானந்தம், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா, பெ ாள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.