புரட்டாசி உற்சவம்: தல்லாகுளம் தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2014 12:09
புதுார் : மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழாவிற்காக கோயில் நிர்வாகத்தினர் பெரியாறு கால்வாயில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். அழகர்கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா முக்கியமானது. கோயில் அருகேயுள்ள தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். சில ஆண்டுகளாக தண்ணீரின்றி இவ்விழா நடந்தது.தற்போது தெப்பத்தில் தண்ணீர் நிரம்பும் வகையில் மழைநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் தெப்பத்தை ஆழப்படுத்தி, சுற்றிலும் ’பேவர் பிளாக்’ கற்கள் பதிக்கப்பட்டன. தெப்பத்திற்கு தண்ணீர் வரும் வகையில் பெரியாறு பிரதான கால்வாயில் திருப்பாலையில் இருந்து தெப்பம் வரை கான்கிரீட் வாய்க்கால் அமைக்கப்பட்டது. கோயில் புரட்டாசி திருவிழா செப்.,26ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்.,6ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்காக பெரியாறு கால்வாயில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தண்ணீர் நிறைந்து தெப்ப உற்சவத்திற்கு தயாராக உள்ளது.