கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி விழா 24ம் தேதி தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2014 12:09
நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒன்று நவராத்திரி விழா. இந்த ஆண்டு இந்த விழா வரும் 24-ம் தேதி தொடங்கி அக்.3-ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. முதல் நாள் 24-ம் தேதி காலை 7 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 9-ம் நாள் விழா வரை காலையிலும், மாலையிலும் அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 10-ம் நாள் விழாவான அக்.3-ம் தேதி அதிகாலை 4.30-க்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 6.30 மணிக்கு அம்பாள் வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10.30-க்கு அன்னதானம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்பாள் வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து மகாதானபுரம் நோக்கி புறப்படுவார். பஞ்சலிங்கபுரத்தில் ஆராட்டு முடிந்ததும் வாண வேடிக்கை நடைபெறும். பின்னர் ஸ்ரீகோயில் திரும்பியதும் அம்மன் ஆராட்டு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு அதிகாரிகள் செய்துள்ளனர்.