பதிவு செய்த நாள்
18
செப்
2014
12:09
மயிலாப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மாடவீதிகளில், கொலு பொம்மை விற்பனை களைகட்டி வரு கிறது. வரும் 23ம் தேதி, நவராத்திரி துவங்க உள்ளது. அதை முன்னிட்டு, சென்னையின் முக்கிய பகுதிகளில், கொலு பொம்மை விற்பனை, விநாயகர் சதுர்த்தியை ஒட்டியே துவங்கி விட்டது. மயிலாப்பூரில், கபாலீசுவரர் கோவில் மாடவீதிகளில், கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. கொலு பொம்மை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில், ராமாயண கதை பொம்மைகள், ஆழ்வார்கள், நாய ன்மார்கள்,அஷ்டலட்சுமி, தசாவதார தொகுப்பு, ராமர், ராவணன் மற்றும் பல்வேறு வகையான கடவுள் பொம்மைகள் கண்களை ஈர்க்கும் விதத்தில், வைக்கப்பட்டு உள்ளன. காகித கூழ், மணல், கருங்கல், மரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில், தயாரிக்கப்பட்ட இந்த பொம்மைகளை, சென்னைவாசிகள் ஆர்வத்துடன், வாங்கி செல்கின்றனர். சிலைகள், 50 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.