ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பாதுகாப்பு குறைவு காரணமாக பக்தர்கள் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு, தரிசனம் செல்லும் முன்பு மூன்றாம் பிரகாரம் மண்டபத்தில் உடை மாற்றும் அறையில், பக்தர்கள் துணிகளை மாற்றி கொள்கின்றனர். அப்போது பக்தர்கள் சிலர் அறை வெளியில் மூன்றாம் பிரகாரம் மண்டபத்தில் சிறுநீர், பீடி, சிகரெட் பிடித்து அசுத்தம் செய்வதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.பக்தர்கள் அதிகம் நடமாடும் மூன்றாம் பிரகாரம் கோயில் காவலர்கள் பாதுகாப்பில் இல்லாமல், தனியார் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பதால் இவர்களின் கவன குறைவால், மூன்றாம் பிரகாரம் சுகாதாரகேட்டின் புகழிடமாக திகழ்கிறது.அசுத்தம் செய்யும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு பணியில் காவலர்களை முழுமையாக ஈடுபடுத்தவும் கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.