கீழக்கரை: ஏர்வாடியில் அல்-குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது வலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்காவின் 840ம் ஆண்டு உரூஸ் சந்தனக்கூடு விழா நடந்தது.செப்., 18 மாலை 6 மணிக்கு சந்தனக்கூடு நிகழ்ச்சி துவங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு பாதுஷா நாயகம் பெயரில் புகழ் மாலை எனும் மவுலீது ஷரீப்பு ஓதப்பட்டது.நேற்று அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முசாபீர் நல்ல இப்ராகீம் ஒலியுல்லா தைக்காவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டின் முன் குதிரைகள், யானை புடைசூழ அனைத்து சமூக மக்களின் ஊர்வலம் நடந்தது.பின், வெள்ளிகுடத்தில் உள்ள சந்தனத்தை அடக்கஸ்தலத்தில் ஹக்தார் சபையினர் பூசினர். ஹக்தார் நிர்வாக சபைத்தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாரூக்ஆலீம், உதவித்தலைவர் செய்யது சிராஜுதீன், ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.செப்., 25 மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்ச்சோறு வழங்கப்படும்.