நவராத்திரியின் ஆறாம் நாளில் அம்பிகையை சண்டிகையாக வழிபாடு செய்ய வேண்டும். தலையில் மூன்றாம் பிறை சூட்டி அலங்கரிக்க வேண்டும். மாக்கோல மிட்டு, செம்பருத்தி, செவ்வரளி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். மாதுளை, ஆரஞ்சு பழவர்க்கங்களைப் படைத்து வழிபட்டால் கவலை தீர்ந்து நிம்மதி உண்டாகும்.மதுரை மீனாட்சி நாளை திருமணக்கோல அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். பாண்டிய மன்னரான மலையத்துவஜன் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தில் அம்பாள் குழந்தையாகப் பிறந்தாள். அவளுக்கு தடாதகை என்று பெயரிடப்பட்டது. பாண்டிய நாட்டின் இளவரசியான அவள், எட்டுதிசை பாலகர்களையும் வென்று கயிலாயத்துக்கு படையெடுத்தாள். அங்கு சிவனைக் கண்டதும், இவரே உன் மணவாளன் என அசரீரி ஒலித்தது. இருவருக்கும் மதுரையில் கோலாகலமாய் திருமணம் நடந்தது. அந்த மணக்கோல மீனாட்சியைத் தரிசித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
நைவேத்யம் : தேங்காய் சாதம்
பாடல் பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன் முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.