பதிவு செய்த நாள்
30
செப்
2014
12:09
சென்னை : ஆயுதபூஜையை முன்னிட்டு பாரிமுனையில், பொரி, பழம் விற்பனை களைகட்ட துவங்கிஉள்ளது. சரஸ்வதி பூஜை வரும் அக். ௨ல் நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. கொத்தவால்சாவடியில் உள்ள மொத்தவிலை அங்காடிகளில், ஆயுத பூஜைக்கான பொருட்கள் மூட்டை மூட்டையாக குவியத் துவங்கியுள்ளன. ஒரு கிலோ உடைத்த கடலை 43 முதல் 47 ரூபாய் வரையிலும், பொரி ஒரு மூட்டை, 320 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இனி வரும் நாட்களில், மழை இல்லாத பட்சத்தில், வரத்து அதிகமிருந்தால், பொரி விற்பனை சூடு பிடிக்கும் என,வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாரிமுனை பந்தர் தெருவில் ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப்பழம் உள்ளிட்ட பழம் மற்றும் மலர் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. புரட்டாசி மாதத்தால் துளசி உள்ளிட்ட மலர் விற்பனை தற்போது அதிகமாகவே உள்ளது. அடுத்த ஒரு சில நாட்களில், பூசணிக்காய் விற்பனை துவங்க உள்ளது.