கடவுள் இல்லை என்றுஒரு கூட்டம் வாதிடுகிறது.கடவுளை மிஞ்சி சாதிப்பேன் என விஞ்ஞானத்தின் பெயரால் மற்றொரு கூட்டம் ஓலமிடுகிறது. இப்படி கடவுளை நிந்திப்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும். இதோ! பைபிள் சொல்வதைக் கேளுங்கள். மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக்கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என்கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி,மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன். சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார் நீ என்னை விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன். மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிறஇருதயமுள்ள மனுஷன் சபிக்கப் பட்டவன் என்று கர்த்தர் சொல்கிறார். எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும்அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும்இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்கு சொல்லியிருந்தோம்.