Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் நிகழ்த்திய அற்புதம்! தனிக்குடித்தனமும் நல்லது தான்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரஸ்வதி 108 போற்றி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
03:09

சரஸ்வதி பூஜையன்று மட்டுமல்ல! தினமும் மாலையில் மாணவர்கள்
சொல்ல வேண்டிய போற்றியைத் தந்துள்ளோம். இதைச் சொல்வதால்
கல்வியில் அபிவிருத்தி உண்டாகும். பாடங்கள் மனதில் பதியும்.

ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் அறியாமை நீக்குவாய் போற்றி
ஓம் அபயம் அளிப்பாய் போற்றி
ஓம் அனுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அட்சமாலை கரத்தாய் போற்றி
ஓம் அறிவின் தலைவியே போற்றி
ஓம் அழகில் அன்னமே போற்றி
ஓம் அளவிலா புகழினாய் போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகிலம் காப்பாய் போற்றி
ஓம் ஆசான் வடிவே போற்றி
ஓம் ஆனந்த ரூபினியே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆயகலை அருள்வாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் இசை வடிவானாய் போற்றி
ஓம் இளமான் சாயலாய் போற்றி
ஓம் இன்னிசை குயிலே போற்றி
ஓம் ஈகை குணத்தாளே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈடேற்றுபவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உலகம் உய்விப்பாய் போற்றி
ஓம் எண் எழுத்து ஆனாய் போற்றி
ஓம் எழிலே உருவானாய் போற்றி
ஓம் ஏடு ஏந்தியவளே போற்றி
ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கலைமகள் தாயே போற்றி
ஓம் கலை களஞ்சியமே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் கலைவாணி தாயே போற்றி
ஓம் கலைக்கு அரசியே போற்றி
ஓம் கம்பரைக் காத்தாய் போற்றி
ஓம் காட்சிக்கு எளியாய் போற்றி
ஓம் காயத்ரியானவளே போற்றி
ஓம் குருவின் வடிவே போற்றி
ஓம் குறை பொறுப்பாய் போற்றி
ஓம் குணக் குன்று ஆனாய் போற்றி
ஓம் குணம் கடந்தவளே போற்றி
ஓம் குருபரர் நாவில் உறைவாய் போற்றி
ஓம் கூத்தருக்கு அருளினாய் போற்றி
ஓம் கூத்தனுõர் வாழ்பவளே போற்றி
ஓம் சகலகலா வல்லியே போற்றி
ஓம் சரஸ்வதி தாயே போற்றி
ஓம் சதுர்முகன் நாயகியே போற்றி
ஓம் சந்தேகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் சச்சிதானந்த ரூபமே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் வடிவே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தி அளிப்பாய் போற்றி
ஓம் சுருதி மறை பொருளே போற்றி
ஓம் ஞான வித்யாம்பிகையே போற்றி
ஓம் ஞானேஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஞாலம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஞான சக்தி வடிவே போற்றி
ஓம் ஞானாசிரியை ஆனாய் போற்றி
ஓம் தவக்கோலத் தாயே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பாய் போற்றி
ஓம் தயை மிக்கவளே போற்றி
ஓம் தயாநிதி தருபவளே போற்றி
ஓம் துõய மனத்தினாய் போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நன்னெறி நாயகியே போற்றி
ஓம் நலம் அருள்பவளே போற்றி
ஓம் நாவின் அரசியே போற்றி
ஓம் நான்மறை வித்தகியே போற்றி
ஓம் நாத வெள்ளமே போற்றி
ஓம் நாதாந்த வடிவே போற்றி
ஓம் நிறைவாழ்வு தருவாய் போற்றி
ஓம் நுட்பம் மிக்கவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பண்ணின் வடிவாய் போற்றி
ஓம் பளிங்கு மனத்தினாய் போற்றி
ஓம் படிக நிறத்தினாய் போற்றி
ஓம் பாட்டின் இனிமையே போற்றி
ஓம் பாட்டின் பொருளே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் பிரம்மன் துணைவியே போற்றி
ஓம் புலமை மிக்கவளே போற்றி
ஓம் பூரண வடிவினளே போற்றி
ஓம் புவனம் காப்பவளே போற்றி
ஓம் புனிதம் மிக்கவளே போற்றி
ஓம் வாக்கில் இருப்பவளே போற்றி
ஓம் வாக்கு தேவதையே போற்றி
ஓம் வித்யாம்பிகையே போற்றி
ஓம் வித்தக ரத்தினமே போற்றி
ஓம் மந்திர வடிவினாய் போற்றி
ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் முக்காலம் அறிந்தாய் போற்றி
ஓம் முக்தி அருள்பவளே போற்றி
ஓம் மூல நட்சத்திரத்தாளே போற்றி
ஓம் மேதா ரத்தினமே போற்றி
ஓம் மேன்மை மிக்காய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் பல தருவாய் போற்றி
ஓம் வீணை தாங்கியவளே போற்றி
ஓம் வெண்தாமரை உறைவாய் போற்றி
ஓம் வெள்ளாடை உடுத்தாய் போற்றி
ஓம் வித்தகம் அளிப்பாய் போற்றி
ஓம் வேதாந்த நாயகியே போற்றி
ஓம் வேத வடிவானவளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar