கொத்தவால்சாவடி: கொத்தவால்சாவடியில், அரசமர விநாயகரை நேற்று காலை 6:00 மணி முதல் மதியம் வரை மூஞ்சூறு ஒன்று, வலம் வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. கொத்தவால்சாவடி கன்யகா பரமேஸ்வரி கோவிலில், அரச மர விநாயகர் சன்னிதி உள்ளது. நேற்று காலை 6:00 மணிய ளவில், விநாயகரை மூஞ்சூறு ஒன்று, தொடர்ந்து வலம் வந்ததை கோவில் ஊழியர்கள் பார்த்தனர். விநாயகரை பக்தர்கள் வலம் வந்த போதும், மூ ஞ்சூறும் அசராமல் பக்தர்களுடனேயே வலம் வந்தது. காலை 6:00 மணிக்கு வலம் வரத்துவங்கிய மூஞ்சூறு, இடைஇடையே சில நிமிட ஓய்வுக்கு பின், மதியம் 1:00 மணி வரை விநாயகரை வலம் வந்தது. அதன்பின் கோயில் வளாகத்தி லேயே ஒரு மூலையில் முடங்கியது. விநாயகரை மூஞ்சூறு வலம் வந்த செய்தியை அறிந்த பகுதி வாசிகள் பலர், கோவிலில் குவிந்தனர்.