விழுப்புரம்: விழுப்புரம் நாராயணன் நகர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ள அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ள மூலவர் அம்மனுக்கு நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, 5:30 மணிக்கு அம்மன் முந்திரி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை சக்தி பீட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.