பதிவு செய்த நாள்
01
அக்
2014
10:10
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, இரண்டு தேர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் ÷ காரிக்கை விடுத்து உள்ளனர். அச்சிறுபாக்கத்தில், புகழ் பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக இருந்த இரண்டு தேர்களில், ஒரு தேரில் ஆட்சிஸ்வரரும் அம்பாளும், மற்றொரு தேரில் இளங்கிளிஅம்மனும் ஆண்டு திருவிழாவின்போது, வீதியுலா சென்று வந்தனர். அதன்பின் இரண்டு தேர்களும் பழுதானதால், கடந்த 1989ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில், சாமிகள் டிராக்டர்கள் மூலம் வீதியுலா கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின் அறநிலைய துறையினரும், பக்தர்களும் இணைந்து 2007ம் ஆண்டு, 15 லட்சம் ரூபாய் செலவில், 27.5 அடி உயரத்தில் ஒரு தேரும், கடந்த 2013ம் ஆண்டு பக்தர்கள் மூலம், 75 லட்சம் ரூபாய் செலவில் மற்றொரு புதிய தேரும் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் சித்திரை விழாவையொட்டி தேர்கள் வெள்ளோட்டம் விடப்பட்டு, மீண்டும் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, இந்த புதிய தேர்கள் சரியான முறையில் மூடப்படாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளன. இதனால் தேர்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வருகின்றன. பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம், பல முறை புகார் தெரிவித்தும் கோவில் நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டி வருவதாக, புகார் எழுந் துள்ளது. எனவே, இந்த இரண்டு தேர்களுக்கும் தகர கூரை அமைத்து, பாதுகாக்க அறநிலைய துறை அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க ÷ வண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.