பதிவு செய்த நாள்
01
அக்
2014
11:10
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் நவராத்திரி விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு திருக்கோலம், அலங்காரத்தில் பெருமாள், அம்பாள் காட்சியளித்து வருகின்றனர். நவராத்திரி விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில் காமாட்சி அம்மன், தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மற்றும் கொலு மண்டபத்தில் இசை கச்சேரி நடந்து வருகிறது. கொலு மண்டபத்தில் பல வகையான திருகோலத்தை குறிக்கும் சுவாமி, அம்பாள் திருகல்யாண நிகழ்ச்சி போன்ற காட்சிகளுடன் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதே போல், அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் துவங்கிய நவராத்திரி விழாவில், முதல் நாள் பரமபத நாதர், கஜேந்திர வரதர், வெண்ணெய் தாழி கிருஷ்ணர், முரளி கிருஷ்ணர், ஆகிய திருகோலத்தில் கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், தினமும் இரவு ஒரு திருகோலத்தில் காட்சியளிக்ககிறார். முதல் நாள் விநாயகர், பொட்டு அம்மன், பனிலிங்க மூர்த்தி, ஆண்டாள், சமயபுரம், படவேட்டடம், ஆறாவது நாளாக பச்சையம்மன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அய்யப்பன் நகரில் உள்ள, படவேட்டம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், தினமும் ஒரு திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார். முதல் நாள் சந்தன மாரி, தீப்பாஞ்சியம்மன், பொன்னியம்மன், புற்று மாரியம்மன், திரிசூல நாயகி, பிள்ளை களை காத்தருளும் பேரரசி ஆகிய திருகோலத்தில் காட்சியளித்தார்.