கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2014 11:10
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை 7 மணியளவில் திருமஞ்சனம், 17 வகையான அபி ஷேகங்கள், சகஸ்ரநாம பூஜைகள் செய்து மகாதீபாரதனை நடந்தது. இரவு 7 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து நவராத்திரி குழுவினரால் கொலு பொம்மை அமைத்து பஜனை மற்றும் நவகன்னிகள் பூஜையும் நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. அலங்கார தீபங்கள் வைத்து வழிபாடு நடத்தினர். திரளான ஆர்ய வைசிய சமூக பக்தர்கள் பங்கேற்றனர்.