கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பிள்ளைகளால் பெருமை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2014 12:10
பாச பந்தத்துடன் பழகிடும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் நன்மை தருவர். பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். நவ.13க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியனால் கண்நோய் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னை உருவாகலாம்.
தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் சவால்களை எதிர்கொள்வீர்கள். போட்டியாளரால் பிரச்னை தலைதுõக்கும். அக்.20க்கு பிறகு அரசாங்க வகையில் நன்மை கிடைக்கும்.
பணியாளர்கள் குருவால் சிறப்பான நிலை பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. சிலர் பணிமாற்றம் கிடைக்கப் பெறுவர். நவ.13க்கு பிறகு பதவி உயர்வும் கிடைக்கும்.
கலைஞர்கள் புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள்.
விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் பெறுவர்.
பெண்கள் கணவரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். நவ. 2 க்கு பிறகு உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம் கவனம்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.