பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில் முத்தாலம்மன் கோயில் புரட்டாசி விழா நடந்தது.பட்டிவீரன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, நெல்லூர், சித்தரேவு கிராமங்களில் பத்து நாட்களுக்கு முன்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி விழாவிற்கு சாமி சாட்டப்பட்டது. சித்தரேவு, நெல்லூருக்கு குப்பிநாயக்கன்பட்டியிலிருந்து சாமி அழைத்து வரப்பட்டது. மற்ற கிராமங்களுக்கு தேவரப்பன்பட்டியிலிருந்து அழைத்து சென்றனர். முதல் நாளில் அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். நேற்று முன் தினம் கிடா வெட்டப்பட்டது. அன்று மாலை அம்மன் பூஞ்சோலைக்கு சிறப்பு அலங்காரத்துடன் அழைத்து செல்லப்பட்டார். இத்திருவிழா ஏழு கிராமங்களிலும் ஒரே நாளில் துவங்கப்பட்டு முடிவடைவது சிறப்பாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு கிராமத்தினரும் சேர்ந்து திருவிழா கொண்டாடுவது வழக்கமாக நடந்து வருகிறது.