பதிவு செய்த நாள்
20
அக்
2014
10:10
திருநெல்வேலி: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி தேரோட்டம் சிறப்பாக நடந்தது. இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, அக்., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, சொற்பொழிவுகள் நடந்து வருகிறது நடக்கிறது.
9 ம் திருநாளான நேற்று காலை 8:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள், 4 ரதவீதிகளிலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை 8:00 மணிக்கு யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 5:00 மணிக்கு மேல் தெற்குமாசிவீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசுக்காட்சி கொடுத்தல், இரவில் 7:20க்கு மேல் 8:20 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.