பதிவு செய்த நாள்
20
அக்
2014
10:10
அவிநாசி : அவிநாசி ஐயப்பன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில் உள்ள, ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 31ல் நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா நேற்று காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதன்பின், மகா சங்கல்பம், அஷ்டோத்ர சகஸ்ர சங்கஸ்தாபனம், கும்பஸ்தாபனம், ஸ்ரீருத்ர சமக ஜபம், தர்ம சாஸ்தார மூல மந்த்ர ஹோமம் ஆகியன நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியாக, 1,008 சங்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, சிறப்பு ஹோம பாராயணத்துக்கு பின், ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. வேத மந்திர பாராயணம், சிறப்பு அலங்கார பூஜை ஆகியன நடைபெற்றது. பெங்களூரு வாழும் கலை நிறுவன வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில், பாடசாலை மாணவர்கள், பூஜைகளை மேற்கொண்டனர்.விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேக நிறைவு பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீசபரி சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.