தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் விழா கடந்த அக்., 12 ல் சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு பண்டார பெட்டியில் அம்மன் எழுந்தருளி கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10 மணியளவில் கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கொலு மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. பகலில் வாணக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் வாண வேடிக்கை நடைபெறும். நாளை பகல் 1 மணியவில் அம்மன் சொருகுபட்டை சப்பரத்தில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணை தலைவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மாரிமுத்து தøலையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.