பதிவு செய்த நாள்
20
அக்
2014
11:10
கொருக்குப்பேட்டை : புரட்டாசி கடைசி வாரத்தை முன்னிட்டு, கொட்டும் மழையில் நடந்த உறியடி திருவிழாவில் திரளான பகுதிவாசிகள் பங்கேற்றனர். கொருக்குப்பேட்டை, சி.பி., சாலையில் திருவேங்கடமுடையான் கோவில், வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.புரட்டாசி கடைசி வார விழாவை கொண்டாடும் வகையில், 30ம் ஆண்டு உறியடி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவியருடன் பெருமாள் வீதியுலா வந்தார்.பின், உறியடி நிகழ்ச்சி நடந்தது. முதலில், சிறுவர்கள் பலர் உறியடித்தனர். பின், இளைஞர்கள் மீது, உரியை அடிக்கவிடாமல் வண்ணப்பொடி கலந்த தண்ணீர் நாற்புறத்திலும் பகுதிவாசிகள் திரண்டு பீய்ச்சி அடித்தனர்.அதில், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறியை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கோலப்போட்டியும், நேற்று, அன்னதானமும் நடைபெற்றது.