திருமலையில் காத்திருப்பு அறைகளைஆன்மிக தியேட்டராக மாற்ற முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2014 11:10
திருப்பதி: திருமலையில் உள்ள காத்திருப்பு அறைகளை, ஆன்மிக தியேட்டர்களாக மாற்றம் செய்ய, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த சீனிவாசலு ரெட்டி என்பவர் அளித்த நிதி உதவியுடன், வைகுண்டம் 1ல் உள்ள 25ம் எண் காத்திருப்பு அறையில், 117 அங்குலம் உடைய பெரிய, ’டிவி’யை பொருத்தி, ஏழுமலையான் உற்சவங்களை ஒளிபரப்பி, ஆன்மிக தியேட்டராக மாற்றினர். அதேபோல், திருமலையில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளையும், ஆன்மிக தியேட்டர்களாக மாற்ற, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.