கந்தபுராணத்தில் திருத்தணியின் சிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. நமது இடத்தில் இருந்தபடியே திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அது இருக்கும் திசைநோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு, முருகனே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துசுவாமி தீட்சிதர். 19ம் நுõற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது முருகன் சிறுவனாய் முத்துச்சுவாமி தீட்சிதரின் முன் தோன்றி, அவருக்கு கல்கண்டு கொடுத்தார். உடனே, தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனைகுருகுஹ என்று அவர் போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். நாமும் முருகனையே நம் குருவாக ஏற்கலாம்.