திருச்செந்துõரில் போர் நடந்த போது, சூரபத்மன் தன் மாயாசக்தியால் பெரிய மாமரமாக மாறினான். முருகப்பெருமான் வேல் வீசி, மரத்தை இருகூறாகப் பிளந்தார். அதன் ஒருபுறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக்கி அமர்ந்தார். சேவலை தன் இடக்கையில் வைத்துக் கொண்டார். கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் பழநியப்பர் கோயில் தலவரலாறு இந்த தகவலைக் கூறுகிறது. ஆணவத்தோடு யார் நடந்தாலும், அவர்களை அடக்கி வைப்பேன் என்று முருகப்பெருமான் இதன் மூலம் உணர்த்துகிறார்.