இயேசுகிறிஸ்து மக்களிடம் உள்ள பாவங்களை கிரகித்து ஏற்றுக் கொள்ள, வெறும் மூன்று மணி நேரங்களே ஆனதாம். தேவகணக்குப்படி, இந்த மூன்றுமணி நேரமும் கண்ணிமைக்கும் அளவு தான் இருக்கும் என்கிறார்கள். பரிசுத்தமானவர்கள் கண்ணுக்கு தான் பிதா தெரிவார். இயேசுநாதர் எப்போதும் தன்னை உலகுக்கு அனுப்பிய பிதாவின் முகத்தை தரிசித்துக் கொண்டே இருப்பார். ஆனால், பாவங்களை ஏற்ற அந்த மூன்றுமணி நேரமும் அவரது முகம் தெரியவில்லை.அந்த பாவங்கள் களையப்பட்டதும், பிதாவின் முகம் உடனடியாகத் தெரிந்தது. அப்போது அவர் பிதாவை நோக்கி, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்? என உரக்கக் கூவினார். அப்போது பிதாவானவர், தனது தாசன் ஏசாயாவின் மூலம், என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன், என கூறினார்.