Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்களுக்குப் புலப்படாத சித்தர்கள்! மாணவர்களே... வெற்றிக்கான உங்கள் நட்சத்திர சிறப்பு பலன்கள்! மாணவர்களே... வெற்றிக்கான உங்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2011
12:06

ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது.  நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.

ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar