அவலூர்பேட்டை: வளத்தியில் ஐப்பசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் வளத்தி ம ங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மருதீஸ்வரருக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில் கோவில் நிர்வாகி முருகேசன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.