விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைந்துள்ள பூமாரியம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் பூ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அமாவாசையை யொட்டி இங்கு நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம், 6:30க்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.