பதிவு செய்த நாள்
25
அக்
2014
11:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.இக்கோயிலில் காலை 8.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகள் நடந்தன. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பகவிநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், அடுத்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டப்பட்ட பின், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சார்யார்கள் காப்பு கட்டினர். துணை கமிஷனர் பச்சையப்பன் கலந்து கொண்டார்.சூரசம்ஹாரம்தினமும் இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்து அருள்பாலிப்பார். அக்., 28ல் கோயில் ஊழியர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், அக்., 29ல் சூரசம்ஹாரம், அக்., 30ல் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சட்டத்தேரில் எழுந்தருளி கிரிவீதியில் தேரோட்டம், மாலை மூலவர் முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை தரிசனம் நடக்கும்.