பழநி : பழநி கந்தசஷ்டி விழாவிற்காக கோயில் யானை ‘கஸ்தூரி’ யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அங்கு ஆறு நாட்கள் தங்கி பக்தர்களுக்கு அருள்ஆசி வழங்குகிறது. பழநி மலைக்கோயிலில் நடைபெறும் ஒரே ஒரு திருவிழா கந்த சஷ்டி மட்டும்தான், இவ்விழா நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கி, அக்.,30 திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் தங்கியுள்ள யானை கஸ்தூரி, கந்த சஷ்டி விழாவிற்கு மட்டுமே மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது. நேற்று காலை 9மணிக்கு யானைபாதை வழியாக மலையேறிய கஸ்தூரி, சின்னக்குமாரசுவாமி (முருகப்பெருமான்) சூரன்களை வதம் செய்யும் வரை மலைக்கோயில் வடக்கு வெளிபிரகாரத்தில் தங்கி ஆறுநாட்கள் பக்தர்களுக்கு அருள் ஆசிவழங்குகிறது.